நீங்க என்னதான் அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை, கிளிப்பிள்ளை... ஏன், தென்னம்பிள்ளையை வளர்த்தாலும்கூட, அதுக்கு உங்க இனிஷியலைப் போட்டுக்க முடியாது.
- பேர் சொல்ல பிள்ளைகளை வளர்ப்போர் சங்கம்
- மதுரை மதி, துவரிமான்.
‘‘2012ல் உலகம் அழியப் போகுதுன்னு என் கணவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... என்ன செஞ்சார்?’’
‘‘எல்லார்கிட்டயும் கடன் வாங்க ஆரம்பிச்சிட்டார்..!’’
- பி.ஆர்.பாண்டி, மதுரை.
‘‘ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப மாறிட்டாரு...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘இப்பல்லாம் மேடையையே குற்றவாளிக் கூண்டு மாதிரி அமைக்கச் சொல்லிட்டு, அதுக்குள்ள நின்னுதான் பேசவே ஆரம்பிக்கறா£ரு!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
என்னதான் செல்போனை கண்டுபிடிச்ச சாதனையாளர்னாலும், நாம தொலைச்ச செல்போனை அவரால கண்டு பிடிச்சுத் தரமுடியாது!
- ஜி.தாரணி, மதுரை.
ஃபிரண்ட்ஸ் மீட்டிங்ல
ஃபிரண்ட்ஸை கட்டிப் பிடிச்சு கை குலுக்கலாம்; போர்டு
மீட்டிங்ல போர்டை கட்டிப் பிடிச்சு கை குலுக்க முடியுமா?
- ஏதோ ஒரு சாக்கு வைத்து யாரையாவது கட்டிப் பிடிக்கும் களவாணிகள் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.
‘‘உன் மேல போடப்பட்டது பொய் வழக்குன்னு எப்படிச் சொல்றே கபாலி..?’’
‘‘நான் ராத்திரியில திருடினதை ‘பகல்கொள்ளை’ன்னு போட்டிருக்காங்களே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘பையனுக்கு அஞ்சு வயசு ஆகிடுச்சுன்னு சொல்றீங்க... இன்னுமா அவனுக்குப் பேர் வைக்கலை?’’
‘‘அவனுக்கு பேரும் புகழும் 30 வயசுக்கு மேலதான் வரும்னு ஜோசியர் சொல்லிட்டார்..!’’
- க.கலைவாணன், நகரி.