தத்துவம் மச்சி தத்துவம்

‘‘என்ன இது... சாப்பாடு செய்யாம நிறைய அண்டாக்கள்ல தண்ணி மட்டும் நிரப்பி வச்சிருக்கீங்க..?’’ ‘‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கை நனைக்க வர்றோம்னு சொன்னாங்க..!’’ - பா.ஜெயக்குமார், வந்தவாசி.
‘‘தலைவர் எதுக்கு கையிலே மூணு ஃபுல் பாட்டில் சரக்கோடு ஆபீசுக்குப் போறார்..?’’ ‘‘தினமும் மூணு லிட்டர் தண்ணி சாப்பிடறது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்!’’ - எஸ்.கோபாலன், சென்னை-61.
பெயர் வேண்டுமானால் ‘வான்’கோழியாக இருக்கலாம்; ஆனால் அது தரையில்தான் நடந்தாகணும். - குவாட்டரும் பிரியாணியும் கலந்து அடித்து அந்தரத்தில் மிதப்போர் சங்கம் - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
‘‘தலைவர் ஏன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போறதா அறிவிச்சு இருக்கார்..?’’ ‘‘தேர்தல் நியாயமா நடைபெறும்னு சொல்லிட்டாங்களே..!’’ - சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.
கடலை எண்ணெய் தயாரிக்க கடலை இருந்தா போதும்... விளக்கெண்ணெய் தயாரிக்க விளக்கு இருந்தா போதுமா? - எண்ணெய் தேய்த்துவிட்டு குளிக்காமல் சிந்திப்போர் சங்கம் - ஏ.ஸ்ரீதர், மதுரை.
என்னதான் சிறந்த கதா‘பாத்திரமா’ இருந்தாலும், அவசரத்துக்கு அவரை அடமானம் வைக்க முடியாது... - பாத்திரமறிந்து தத்துவங்களைப் பரிமாறுவோர் சங்கம் - நா.கி.பிரசாத், கோவை.
‘‘புலவரை ஏன் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிறீர்கள் மன்னா..?’’ ‘‘அவரும் பாட்டுப் பாடி நம்மை சாகடிக்கிறாரே..!’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
|