ஆசை



‘‘பாருய்யா, தர்ட்டி இயர்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னா நம்பமுடியுமா... இன்னும் அப்படியே...’’ ‘‘ஆமாம், நீ சொல்றது கரெக்ட்தான். கட்டுக்குலையாம அப்படியே...’’ ‘‘என்ன கலர் பாரேன்... யாருக்குத்தான் ஆசை வராது? சாமியாரா இருந்தாக்கூட ஒரு நிமிஷம் நின்னு பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டுட்டுப் போவான்!’’ ‘‘அம்சம்தான்..!’’‘‘வீட்டுக்காரன் கொடுத்து வெச்சவன்!’’


‘‘அட போப்பா... அவன் வேண்டாம்னு சொல்லிவிட்டான். இப்ப இன்னொருத்தர் சொத்து. பெரிய தொழிலதிபராம்!’’‘‘வேண்டாம்னு சொல்ல எப்படி மனசு வந்தது? இப்படியும் இருப்பாங்களா..?’’‘என்ன பண்றது? எல்லாம் பணம் பண்ணும் வேலை. பணம் இருந்தால் நாம்கூட...’’‘‘ஆசையைப் பாரு ஆசையை! வாடகைக்கே இங்க வக்கில்லை. இந்த பங்களாவை வாங்கப் போறாராம். சும்மா வாப்பா..!’’இரண்டு நண்பர்களும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.