வாசகர் கவிதைகள்

கொண்டாட்டம்இந்தப் பொங்கல்மிகக் கொண்டாட்டமாய்கழிந்துவிட்டது,வயல்வெளியைவிற்றுவந்த பணத்தில்! பெ.பாண்டியன், காரைக்குடி. பலன் வாய் விட்டுச் சிரித்தால்நோய் விட்டுப் போகுமாம்!ஆனால், பலமுறைசிரித்தும் பயனில்லைபைத்தியக்காரனுக்கு!அதிரை புகாரி, அதிராம்பட்டினம். பயன்பேருந்துக்கு வெளியில் நின்றுகையேந்தும் சிறுமிக்குபயன்படவேயில்லை,கரம், சிரம் புறம்நீட்டாதீர்கள் என்றுபேருந்துக்கு உள்ளேஎழுதியிருந்த வாசகம்... கமருதீன், தஞ்சை. கண்ணீர்தாலி ஏறி திருமணம் முடிய,கண்ணீர் துளிர்க்கிறதுமணமகளைபக்கத்திலிருந்து பார்க்கும்தாயின் கண்களிலும்,தூரத்திலிருந்து பார்க்கும்காதலன் கண்களிலும்!ஸ்ரீநிவாஸ்பிரபு, சென்னை90. கவலைஇந்தப் பொங்கலுக்கு அம்மாவின் கவலையெல்லாம்,புக் செய்த சிலிண்டர் பொங்கல் வைக்கவந்துவிட வேண்டுமேஎன்பதுதான்!பெ.பாண்டியன், காரைக்குடி. ஜாதகம்மனிதன் பொல்லாதவன்ஆடுகளுக்குக்கூடஜாதகம் பார்க்கிறான்.மாசி மாதம் பதினெட்டாம் தேதிமுனியசாமி கோயிலுக்குவெட்டப்படுமாம்! சு.கலைச்செல்வன், குண்டுகுளம். மனசுவரன் தேடிதரகர்களிடம் கொடுக்கநகலெடுத்து நகலெடுத்தேநைந்து போயிருந்ததுஅக்காவின் ஜாதகக் குறிப்பு,அவள் மனசைப் போலவே! எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.
|