கவிதைக்காரர்கள் வீதி
உதிர்தல் உதிர்வு பூவிற்கு இறப்பா? விடுதலையா?
- கவி கண்மணி, கட்டுமாவடி.
இறுதி ஏதோ ஒரு உயிரின் இறுதி இருக்கிறது, சிலந்தி வலைப்பின்னலில்!
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
பிரியம் கடைசியாய் ஒருமுறை பேச முயன்று தவறிய கைபேசி அழைப்பில் தொக்கி நிற்கிறது, தற்கொலையான அக்காவின் பிரியம்!
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
ஊர்வலம் இறந்த பூச்சியை ஊர்வலமாக அழைத்துச் சென்றன எறும்புகள்.
- ப.மதியழகன், மன்னார்குடி.
சதி மரங்களைக் கொன்றோம், கூடவே இறந்தது மழை!
- அ.கோ.விஜயபாலன், திருவாரூர்.
குரல் அப்பாவின் அஸ்தி கரைத்த ஆற்று நீரில் மூழ்கிக் குளித்தபோது ‘‘ரொம்ப நேரம் தண்ணிக்குள்ளே மூச்சடக்கி இருக்காதே’’ என்ற குரல் கேட்பது போலவே இருந்தது.
- வஸந்த் பூபதி, வெள்ளாங்கோவில்.
|