நியூஸ் வே



தமிழ் பேசுவதற்கே தடுமாறும் வடநாட்டு ஹீரோயின்களுக்கு மத்தியில், பேச்சு என்ன... சுதி சுத்தமாக பாடவே தெரிந்தவர் வேதிகா. ‘காவியத்தலைவன்’ படத்தின் பிரஸ் மீட்டில் வேதிகாவின் தமிழ்ப் பேச்சைக் கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் ‘வாவ்’ போட்டது தான் வேதிகாவின் லேட்டஸ்ட் சந்தோஷம்.

இங்கேதான் அந்த அடிபிடி. சென்னைக்கு மம்மூட்டி ஷூட்டிங் வந்தால் அவருக்குப் பிடித்தமான நெய்மீன் கருவாடு, நெத்திலி வறுவலோடு சாப்பாடு மோகன்லால் வீட்டிலிருந்து போகிறது. அதேமாதிரி லால் வீட்டில் பையன், பெண்ணுக்கு பிறந்தநாள் என்றால் மம்முக்கா வீட்டிலிருந்து அத்தனை பேரும் ஆஜர். நேசம், பாசத்தை கத்துக்கங்க தமிழ் தம்பி களா!
‘கோலி சோடா’வுக்கு நுரை பொங்கக் கிடைத்த வசூலும், பாராட்டும் விஜய்மில்டனை உற்சாகமாக இயங்க வைத்துள்ளது. கடந்த வாரம் கார்த்தி கதை கேட்டு, கையோடு கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.

வெற்றிமாறன் ‘ஆடுகளம்’ இயக்கிவிட்டு நெடுங்காலமாக காத்திருக்கிறார். தனுஷுக்கு முழுப்பணமும் பட்டுவாடா பண்ணிய கம்பெனிகளுக்கு அவர் நடிக்கப் போய் விட்டதால் இந்தக் காத்திருப்பு. ஏற்கனவே சிம்பு ‘வட சென்னை’ என்ற படத்தில் நடிக்க ஓகே சொல்லியும் பிறகு நடிக்கவில்லை. இப்போது தனுஷ் இந்திப் படம் முடித்துவிட்டு நேரே வந்துவிடுவதாக சத்தியம் பண்ணி விட்டதால் மறுபடியும் வெற்றி வெயிட்டிங்.

திடீர் திடீரென ஆப்சென்ட் ஆகிவிடும்
‘பூ’ பார்வதி, ‘மரியான்’ படத்துக்குப் பிறகு ‘உத்தமவில்லன்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக தமிழுக்கு மீண்டும் வருகிறார்.

லிங்குசாமியின் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா, ஸகாரியாவோடு ஆடும் ஒரு குத்து டான்ஸ் இடம்பெறுகிறது. பொதுவாக நெருக்கமான சீன்களில் நடிக்க (ஜோவுக்காக) அஞ்சுவார் சூர்யா. இதில் கூச்சம் விலக்கி அசத்தல் டான்ஸ் ஆடியிருக்கிறார். ஞாபகம் இருக்கா ஸகாரியா! ‘கோக்’ விளம்பரத்தில் இம்ரான் கானோடு ஆட்டம் போட்ட பொண்ணுதாங்க.

இளவட்ட அனிருத் அடுத்தடுத்து இறுக்க நெருக்க படங்களில் அதிகமாகக் காணப்
படுகிறார். சமீபத்தில் ஸ்ருதியோடு இருந்து வெளியான புகைப்படத்தை பார்த்துவிட்டு, ‘‘இதில் ஒண்ணுமேயில்லை, செல்போனில் படம் பிடித்தால் ஒட்டித்தானே நிற்கணும். நத்திங் சீரியஸ்’’ என்கிறார். சிம்பு இடத்திற்கு வந்திடுவீங்களா பாஸ்!

முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும் அசரவில்லை ஜி.வி.பிரகாஷ். ஆனால், ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’ படம் ரிலீசான பிறகுதான் அடுத்த படம் தயாரிப்பது என முடிவெடுத்துவிட்டார். நிறையப் படங்கள் ஜி.வி.யின் டைம் இல்லாமல் வேறு மியூசிக் டைரக்டர்களுக்கு போவதால், ‘பென்சில்’ சக்ஸஸ் பார்த்து மட்டுமே அடுத்த படங்களில் நடிப்பதாக உத்தேசம்!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா கிசுகிசு தமிழ் சினிமா எங்கும் பரவி வீசுவதால் சும்மா பார்க்கும்போது சிரிக்கக்கூட மறந்துவிட்டார்கள் இருவரும். சமீபத்தில் ஒரு பாடல் வெளியீட்டுக்கு வந்த இருவரும் வடக்கு, தெற்காக பார்த்துக்கொண்டு இருந்ததை ரசித்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

இன்னொரு பத்திரிகையாளர் எழில்பாரதி ‘பகல்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். தேனி பகுதியெங்கும் முகாமிட்டு படத்தை முடித்துவிட்டே திரும்புகிறார்கள். சேரனின் சீடர்தான் எழில்.

தங்கை மீது அதிக பாசம் வைத்துவிட்டதால், நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது ஃப்ளைட் ஏறி ஐதராபாத் போய் விடுகிறார் சிம்பு. இப்போது ‘வாலு’ படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்திலேயே நடந்துவருவதால், தங்கை மாப்பிள்ளை வீட்டிலிருந்துதான் சாப்பாடு வருகிறதாம். என் தங்கை இலக்கியா!

இரண்டே மாதங்கள்தான்... ‘உத்தமவில்லன்’ அரிதாரத்தைக் கலைத்துவிட்டு ‘த்ரிஷ்யம்’ ரீமேக்குக்கு ஆயத்தமாகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் கமல். இதில் அவர் ஜோடியாக மீனா நடிக்கப்போகிறார், சிம்ரன் நடிக்கப்போகிறார் என்று உலவி வந்த தகவல்கள் எதுவும் உறுதியில்லை. ‘‘பக்கத்திலேயே கௌதமி இருக்க, வெளில ஏன் ஹீரோயின் தேடணும்’’ என்று சிலர் கேட்கிறார்கள்.

இரண்டே மாதங்கள்தான்... ‘உத்தமவில்லன்’ அரிதாரத்தைக் கலைத்துவிட்டு ‘த்ரிஷ்யம்’ ரீமேக்குக்கு ஆயத்தமாகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் கமல். இதில் அவர் ஜோடியாக மீனா நடிக்கப்போகிறார், சிம்ரன் நடிக்கப்போகிறார் என்று உலவி வந்த தகவல்கள் எதுவும் உறுதியில்லை. ‘‘பக்கத்திலேயே கௌதமி இருக்க, வெளில ஏன் ஹீரோயின் தேடணும்’’ என்று சிலர் கேட்கிறார்கள்.

இங்கேதான் அந்த அடிபிடி. சென்னைக்கு மம்மூட்டி ஷூட்டிங் வந்தால் அவருக்குப் பிடித்தமான நெய்மீன் கருவாடு, நெத்திலி வறுவலோடு சாப்பாடு மோகன்லால் வீட்டிலிருந்து போகிறது.

அதேமாதிரி லால் வீட்டில் பையன், பெண்ணுக்கு பிறந்தநாள் என்றால் மம்முக்கா வீட்டிலிருந்து அத்தனை பேரும் ஆஜர். நேசம், பாசத்தை கத்துக்கங்க தமிழ் தம்பி களா! ‘கோலி சோடா’வுக்கு நுரை பொங்கக் கிடைத்த வசூலும், பாராட்டும் விஜய்மில்டனை உற்சாகமாக இயங்க வைத்துள்ளது. கடந்த வாரம் கார்த்தி கதை கேட்டு, கையோடு கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.