கவிதைக்காரர்கள் வீதி
* குழந்தைகள் தீட்டும் பொங்கல் குறித்த ஓவியங்களில் புண்படாமல் வாழ்கிறது நம் பண்பாடு!
* உழவர் என்றோர் இனம் உண்டு அவருக்கும் வயிறு என்றோர் இடம் உண்டு என்று சொல்லிவிட்டுச் செல்கிறது பொங்கல்!
* வறட்சியிலும் இறைச்சி ஆகாத மாடுகளே சந்திக்கின்றன மாட்டுப் பொங்கலை!
* அண்டை மாநில அரிசி தமிழகம் வருகிறது பொங்கலுக்கு!
- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.
* வானம் பார்த்தே விதைத்துப் பழக்கப்பட்டவன் அண்ணாந்து பார்க்கிறான் விற்ற வயலில் முளைத்த அடுக்குமாடி வீடுகளை!
* பங்காளிச் சண்டையில் தரிசான வயலில் உடைந்து கிடக்கும் மண்பானை சிதறிக் கிடக்கிறது தாத்தா சேகரித்து வைத்த விதை நெல்!
* மாட்டுப் பொங்கலன்றும் பசியோடு மாடுகள் சுவரொட்டி தின்னும்!
- பெ.பாண்டியன்,கீழசிவல்பட்டி.
|