பேரீச்சம்பழ கீர்



என்னென்ன தேவை?

பேரீச்சம் பழம் - 15,
பால் - 2 1/2 கப்,
தேங்காய்ப் பால் - 1/4 கப்,
துண்டாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 1 டேபிள்ஸ்பூன்,
சீவிய முந்திரி, பாதாம் - 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?  

பேரீச்சம் பழங்களை அரை கப் வெதுவெதுப்பான பாலில் 15 நிமிடம் ஊற விடவும். கடாயில் நெய்யை சூடேற்றி முந்திரி, பாதாம், பேரீச்சம் பழங்களை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். ஊற வைத்திருக்கும் பேரீச்சம் பழங்களை சிறிது பாலுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பாலை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்க்கவும். இதை உடனடியாகக் கலந்து மிதமான தீயில் 5-7 நிமிடம் வைத்து கெட்டியாகும் வரை வைக்கவும். இத்துடன் நெய்யில் வறுத்த பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி,ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறவும். பிறகு அடுப்பை அணைக்கவும். மேலே சில நெய்யில் வறுத்த பருப்புகள், பேரீச்சம் பழம் தூவி அலங்கரிக்கவும். குளிர்ச்சியாகவும் மிதமான சூட்டிலும்பரிமாறலாம்.