கதாநாயகிகளின் பாடிகாட்ஸ்




அம்மி மிதித்த தும் பார்க்கக்கூடிய பெயர் கொண்ட நடிகை, கோலிவுட்டில் தன் வெற்றிக்கொடி பறக்கும் என்று காத்திருந்தார். ஆனால், காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்ற கதையாகி விட்டது. ஏற்கனவே அவர் நடித்த படங்கள் திரைக்கு வருவது தாமதமான நிலையில், இளம் ஹீரோ ஒருவருடன் வெளியான காதல் கிசுகிசுவும் அவரது மனதை வருத்தமடையச் செய்துவிட்டதாம். இல்லை... இல்லை என்று சொல்லியே, தொண்டையில் தண்ணீர் வற்றிவிட்டதாம். இந்நிலையில் திடீரென்று வீடு மாறிய அவர், இனி புதுப்படம் ஒப்புக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். அத்துடன் சிலரை அணுகி, ‘நல்ல படமா இருந்தா சொல்லுங்க. எந்த பிரச்னையும் இல்லாம நடிச்சு தரேன்’ என்று, பவ்யமாக சொல்கிறாராம்.

சென்னை தி.நகரில், மிகப் பிரமாண்டமான பங்களா கட்டியுள்ளார் ‘விரல் வித்தை’ ஹீரோ. தன் குடும்பத்தினருடன் குடியேறியுள்ள அவர், இதுவரை எந்த நடிகரின் வீடும் இல்லாத அளவுக்கு பங்களாவை அங்குலம், அங்குலமாக இன்டீரியர் டெகரேஷன் செய்து அழகுபடுத்தியுள்ளாராம். பங்களாவின் முகப்பிலுள்ள மரச்சட்டங்கள் விலையுயர்ந்தவை. ‘வுட் பேலஸ்’ என்று வர்ணிக்கும் வகையில் அவ்வளவு அழகாக இருக்கிறது. பங்களா முழுக்க வாஸ்து முறைப்படி கட்டப்பட்டுள்ளதாம். ஹீரோவின் பெட்ரூம் மட்டும் அவரது ரசனைக்கும், வருங்கால காதல் மனைவியான ‘ஹன்ஸ்’ நடிகையின் ரசனைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியில் இதற்குமுன் வசித்த பங்களாவை ரெக்கார்டிங் மற்றும் டப்பிங் தியேட்டராகவும், ஹீரோ மற்றும் ‘சகலாகலா வித்தை’யாளரின் அலுவலகமாக மாற்றிவிட்டார்களாம்.

பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஹீரோயின்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளாக, அவர்களுடைய தாய்க்குலங்கள் வருவது வாடிக்கை. சின்ன நடிகைக்கு கூட பாதுகாவலர்கள் உண்டு. ஒரு நடிகை ஷூட்டிங்கிற்கு வந்தால், நான்கைந்து பேராவது அவருடன் வந்து பொழுதுபோக்கும் சம்பவங்கள் வேறெந்த துறையிலும் கிடையாது. ஆனால், நடிக்க வந்த காலத்தில் இருந்து தந்தையையோ அல்லது தாயாரையோ அழைத்து வருவதைத் தவிர்த்துவிட்டார், காதல் தோல்வி புகழ் ‘தாரா’ நடிகை. ஆனால், கோலிவுட்டில் ‘பிசின்’ நடிகை எங்கு சென்றாலும், அவரது தந்தை பாதுகாப்புப் பணிக்கு வருவார். என்றாலும், பாலிவுட்டில் மட்டும் அவர் வருவது இல்லையாம். ‘ஹன்ஸ்’ நடிகைக்கு அவரது தாயார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணி செய்கிறார். ‘அகர்வால்’ நடிகைக்கு தந்தைக்குலம் காவல் காக்கிறார். அவரை மீறி நடிகையை யாரும் சந்திக்க முடியாது... பேச முடியாது. ‘ஹாசன்’ நடிகைக்கு துணிச்சல் அதிகம். யாரையும் துணைக்கு அழைத்து வருவது இல்லை.



தமிழில் இன்றைக்கு அதிக படங்களில் நடிக்கும் ஒரே ஹீரோ, ‘மைனா’ நடிகர்தான். கிட்டத்தட்ட 12 படங்கள் அவர் கைவசம் இருப்பதாக தகவல். கதை கேட்பார், பிறகு சம்பளம் பேசுவார். கால்ஷீட் சரிப்பட்டால், உடனே அந்தப் படத்தை ஒப்புக்கொண்டு நடிப்பார். இப்படியாக நிறைய படங்களில் நடிக்கும் அவர், அடுத்த ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் கதை என்றாலும் ஒப்புக்கொள்கிறாராம். இப்படியே நடித்து வரும் அவரிடம், முதலில் எந்தப் படம் ரிலீசாகும் என்றால் மட்டும் பதில் கிடைக்கவில்லையாம். எண்ணிக்கையில் அதிக படங்கள் வைத்துள்ள அவர், கொஞ்சம் நிதானமாக யோசித்து, நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வெளியிட வேண்டும் என்று, அவரது நலம்விரும்பிகள் சொல்கின்றனர்.

டோலிவுட்டில் மட்டும் தன் மேனியழகைப் பளிச்சிட வைக்கும் ‘பால்’ நடிகை, தமிழ்ப் படம் என்றால் இழுத்துப் போர்த்திக்கொள்கிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம், ‘ஆந்திர ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு’ என்பதுதான். அதுமட்டுமின்றி, சென்னையில் நடக்கும் திரை விழாக்களில் பங்கேற்கும் அம்மணி, நன்கு இழுத்துப் போர்த்திக்கொண்டு வருகிறார். இதனால் உள்ளம் புழுங்கிய சில போட்டோகிராபர்கள், ‘இப்படி வந்தா, உங்களை நாங்க எப்படி விதவிதமா போட்டோ புடிக்கிறது? கொஞ்சம் கிளாமரா டிரெஸ் போட்டுகிட்டு வந்தாதானே நாங்களும் அதை நல்லா போட்டோ எடுத்து, வெப்சைட்டுக்கு தருவோம்’ என்று புலம்பினார்களாம். உடனே நடிகை, ஜில்லென்று புன்னகைத்தபடி, அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டாராம்.



ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரான ‘ஆனந்த’ டைரக்டர், எந்தப் படம் ஆரம்பித்தாலும் சரி, உடனே அதைப்பற்றி மீடியாவில் கதை மற்றும் டைட்டில் குறித்து சரமாரியாக தகவல் வெளியிடுகிறார்களாம். ‘என் நாலெட்ஜ் இல்லாம என்னென்னவோ எழுதறாங்க. இப்ப தனுஷ் கூட படம் பண்றேன். அதுக்குள்ள ஒரு டைட்டிலை போட்டு, இதுதான் கதைன்னு எழுத ஆரம்பிச்சிட்டாங்க. நானும் ஒரு மீடியாவில் இருந்து வந்தவன்தான். எதுவா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு எழுதினா நல்லா இருக்கும்’ என்கிறாராம்.

உயிர் வாழ்வதற்கு மூச்சுக்காற்று அவசியம். அதுபோல், தங்களைப்பற்றி விளம்பரம் செய்து கொள்ள ட்விட்டர் தளம் முக்கியமாகி விட்டது. மங்களகரமான ‘ராய்’ நடிகை, தன்னைப்பற்றிய எல்லா தகவல்களையும் இதன்மூலம் பகிர்ந்துகொள்கிறார். இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் அவரைப்பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தையும் முன்கூட்டியே அவரது ரசிகர்கள் ‘ட்விட்’ செய்துவிடுகிறார்களாம். இதனால், தன்னைப்பற்றிய தகவலை உடனுக்குடன் படித்துத் தெரிந்துகொள்ளும் நடிகை, தவறான தகவலாக இருந்தால், உடனே சம்பந்தப்பட் மீடியாவை தொடர்புகொள்ள வசதியாக இருக்கிறதாம்.



மலையாள ‘முகுந்த’ ஹீரோவுடன் காதல், இதையடுத்து அவருடன் ரகசிய திருமணம் என்று செய்தி வந்ததில் இருந்து பயந்துபோன ‘நம்பீச’ நடிகை, தமிழில் தனக்கு ஏற்பட்டிருந்த ரம்யமான சூழ்நிலை நாசமாகிவிடுமோ என்று அஞ்சுகிறாராம். அதனால்தான் இங்கிருந்து யார் பேசினாலும், உடனே அந்த தொடர்பை துண்டித்துவிடுகிறாராம். அடுத்தமுறையும் தொடர்புகொண்டால், ‘ஸாரி... ஸாரி... நான் இப்ப மலையாளத்தில் பிஸியாக்கும். ஷூட்டிங்கில் இருக்கிறதுனால பேச முடியாது. நேரம் கழிச்சு பேசுங்களேன்’ என்று, குரலில் ஐஸ் வைத்துப் பேசி, இக்கட்டான நிலையை சாமர்த்தியமாக சமாளிக்கிறாராம். இதை உண்மை என்று நம்பி, சிறிது நேரம் கழித்து அவரது செல்போனுக்குப் பேசினால், ஏற்கனவே பதிவான எண்ணைப் பார்த்துவிட்டு, கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறாராம். மடியில் கனம் இல்லை என்றால், எதற்கு பயப்படுவானேன்?

‘கொலவெறி’யுடன் பாடிய ஹீரோவுக்கு படம் இயக்கும் ஆசை விஸ்வரூபம் எடுத்துள்ளதாம். இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டில், டைரக்டர் என்ற டைட்டிலில் தன் பெயர் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று, கொலவெறியுடன் ஒரு கதை எழுதி வருகிறாராம். இதற்குமுன் ‘ராகவ’ அண்ணன் இயக்கத்தில் நடித்தபோது, உதவி டைரக்டராகப் பணியாற்றி, ஒரு படத்தை இயக்குவதற்கான அத்தனை விஷயங்களையும் கசடற கற்றுக்கொண்டாராம். இதற் கிடையே மற்றவர்களின் இயக்கத்தில் நடித்துக்கொண்டு, பாட்டு பாடுவது, பாட்டு எழுதுவது, இசையமைப்பாளருடன் அமர்ந்து ட்யூன் போடுவது என்று பல விஷயங்களிலும் தெளிவு பெற்ற ஹீரோ, சொந்த பேனர் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக விருப்பம் கொண்டுள்ளாராம்.


புது நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தால் பெரிய ரேஞ்சுக்கு வர முடியாது, சேலரியும் உயராது என்பதை ரொம்ப லேட்டாகப் புரிந்துகொண்ட ‘ட்ராயிங்’ நடிகை, முன்னணி நடிகர்களுக்கு ஜோடி என்றால் மட்டும் பேச முற்படுகிறாராம். இளம் முன்னணி ஹீரோ ஜோடி என்றால், கதையையோ அல்லது தன் கேரக்டரையோ கேட்பது இல்லையாம். சம்பளம் சரிப்பட்டால், கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுக்கிறாராம். நடிக்க வந்த காலத்தில், தானும் ஒரு புதுமுகம்தான். ஆனால், சில ஹீரோக்கள் தன்னை எப்படிப் புறக்கணித்தார்கள் தெரியுமா என்று பிளாஷ்பேக் மூலம் கண்ணீர் சிந்தும் அவர், இனிமேல் யார் வந்து மூளைச்சலவை செய்தாலும், புது நடிகர்களுடன் ஜோடி சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
(படத்தில் இருக் கும் நடிகைகள் நித்யா, முமைத்கான், அமிதா, பவிஸ்கா ஆகியோருக்கும்  இந்தச் செய்தி களுக்கும் தொடர்பில்லை)
- மாயன்