அனுஷ்காவுக்கு குழந்தை இருக்கிறதா?




சமீபத்தில் நடந்த ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு வந்திருந்த அனுஷ்காவைப் பார்த்தவர்கள் சற்று அதிர்ந்துதான் போனார்கள். அவரது முகம் அந்த இளமைத் துள்ளலையும், பொலிவையும் இழந்திருந்தது. ஏற்கெனவே ‘சிங்கம்-2’ படத்தில் பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகளில் அவரது வயதின் முதிர்ச்சி பளிச்செனத் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட சந்தேகம் நேரில் பார்த்தபோது உறுதியானது.

அவருக்கு ஏதோ ஒரு நோய் வந்திருக்கிறது என்கிறார்கள். அனுஷ்காவுக்கு ஏற்கெனவே ரகசிய திருமணம் முடிந்து குழந்தையெல்லாம் இருக்கிறது. இப்போது அந்த குடும்பத்தில் பிரச்சினை என்றெல்லாம் குண்டைத் தூக்கிப் போட்டார்கள். நாகார்ஜுனாவோடு நெருக்கமாக இருந்தவர் பிரிந்து விட்டார் என்கிறார்கள். இப்படி ஆளாளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்க விசாரணையை ஆரம்பித்தோம்.

அனுஷ்காவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘நீங்க கேள்விப்பட்ட எதிலுமே உண்மை கிடையாது. அனுஷ்கா அன்னிக்கு சோர்வா வந்திருந்தது உண்மைதான். அதுக்கு காரணம் அவர் தெலுங்கில் 100 கோடியில் உருவாகும் ‘ராணி ருத்ரம்மாதேவி’க்காக நிறைய ஒர்க் அவுட் பண்ணுகிறார். ஹீரோக்கள் மாதிரி சிக்ஸ் பேக் வைக்க ட்ரை பண்ணிக்கிட்டிருக்கார். கத்திச் சண்டை, களரிச் சண்டை, ஹார்ஸ் ரைடிங்னு தினமும் கடுமையாக உழைக்கிறார். இதனால் அவரது தசைகள் இறுகி சோர்வாக இருக்கிற மாதிரி தெரிகிறது. படம் ரிலீசானதும் பாருங்க. அனுஷ்காவை தெலுங்கு தேசம் மட்டும் இல்லை. இந்தியாவே கொண்டாடப் போவுது...’’ என்கிறார்கள்.
- சினிமா பாண்டு 007