விஷூவலை பார்த்துவிட்டு இசையமைத்த இளையராஜா



கே.எஸ்.வசந்தகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘ஒரு ஊர்ல’. இதன் நாயகன் வெங்கடேஷ். நாயகி நேகா பாட்டீல். விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த வாசன், பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த அருள்வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.  இசை இளையராஜா.


‘‘இது குழந்தையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. வழக்கமாக குழந்தையை மையமாகக் கொண்ட கதையில் குழந்தை அல்லது பெற்றோர் மனநிலை சரி இல்லாத நிலையில் இருப்பார்கள். ஆனால், இதில் யதார்த்தமான வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகளைதான் சினிமாவாக எடுத்துள்ளேன். என்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால் முடிந்தளவுக்கு கதையில் நிஜத்தன்மையை எதிர்பார்க்கலாம்.

பாடல் காட்சிக்கான விஷுவலை படமாக்கிய பிறகுதான் இளையராஜாவிடம் போனோம். பாட்டுக்கு மெட்டு; மெட்டுக்கு பாட்டு என்பது அவருக்கு பழகிய விஷயம். ஆனால், விஷுவலுக்கு பொருத்தமான இசையை அமைத்து, தான் இசை ராஜாதான் என்பதை நிரூபித்திருக்கிறார்...’’ என்கிறார் இயக்குநர் கே.எஸ்.வசந்தகுமார்.

- எஸ்