சரவண பொய்கையில் நீராடி...



வீ.சேகர் இயக்கத்தில் அவரது மகன் காரல் மார்க்ஸ், விவேக், கருணாஸ் இணைந்திருக்கும் படம் ‘சரவண பொய்கை’. இதன் நாயகி அருந்ததி.  எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி, வடிவுக்கரசி, ஏ.வெங்கடேஷ், கிரேன் மனோகர், விஜய் சிரஞ்சீவி, செல் முருகன், சஹானா ஆகியோரும் இருக்கிறார்கள். இசை  விஜய். ஒளிப்பதிவு ராஜு மகேந்திரன். தியேட்டரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை இது. தியேட்டர் அதிபரின் மகள் அருந்ததியும், அங்கு டிக்கெட்  கொடுக்கும் காரல் மார்க்ஸும் காதலர்கள். இந்த ஜோடி எப்படி கரை சேருகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளார்கள். விவேக் இதில்  நடிகராகவே வருகிறார். தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக கருணாஸ் வருகிறார்.

‘‘இதில் எனக்கு ஹோம்லியான வேடம். கேர்ள் நெக்ஸ் டோர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னுடைய கேரக்டர் யதார்த்தமாக இருக்கும். காரல்  மார்க்ஸுக்கு இது முதல் படம். ஆனால், புதுமுகம் என்று சொல்ல முடியாதளவுக்கு பிரமாதப் படித்தியிருப்பார். இந்தப் படத்தில் விவேக், கருணாசுடன்  இணைந்து நகைச் சுவையை வெளிப் படுத்தவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து நடித்தபோதுதான் காமெடி காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும்  என்று கற்றுக்கொள்ள முடிந்தது. இயக்குநர் வீ.சேகருடைய படங்கள் அனைத்தையும் நான் பார்த்துள்ளேன். காதல், காமெடி, சென்டிமெண்ட் என்று எதெல்லாம்  அவரது படத்தில் இருக்குமோ அவை அனைத்தும் ‘சரவண பொய்கை’யிலும் இருக்கும்...’’ என்கிறார் அருந்ததி.

- ரா