அபூர்வ ஸ்லோகம்



ஆனந்தமாய் வாழ ஆதிசங்கரர் அருளிய நட்சத்திர துதி

காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடங்களை பாரதத்தின் ஆங்காங்கே ஸ்தாபித்து, ஷண்மதஸ்தாபனத்தை வகுத்த மகான் ஆதிசங்கரர். அவர் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு ஸ்லோகம் வீதம் உருவாக்கித் தந்திருக்கிறார். ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் அவர் அருளியிருக்கும் இந்த ஸ்லோகங்களை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமுமே பாராயணம் செய்து வளங்கள் பெறலாம்.

சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும். அவ்வாறு பலனடையும்போது பகவானை மறக்காதீர்கள்; ஆதிசங்கரருக்கு நன்றி சொல்லவும் மறக்காதீர்கள். அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாயநாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாயபொதுப் பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாயமூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய
யமனுக்குப் பயந்திருந்த குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரே, வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரே, அனைத்திற்கும் மூல காரணமானவரே, காலத்துக்கு மேம்பட்டவரே, கருணைக்கு இருப்பிடமாக விளங்குபவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாயஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
இஷ்டப்பட்ட மிகச் சிறந்ததுமான பொருளைக் கொடுப்பதில் முன்னிற்பவரே, முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரே, படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரே, பூமி, ஆகாயம், நீர், தேஜஸ், காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டு அம்சங் களையும் தன் உருவாய்க் கொண்டவரே, ரிஷபக் கொடி தரித்தவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாயபாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாயமலை போன்ற ஆபத்துகளைப் போக்கடிப்பவரே, மழு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவரே, பக்தர்களின் பாவங்களைப் போக்கும் தேவ நதியான கங்கையை முடியில் உடையவரே, பாபங்களைப் போக்குபவரே, சாபத்தினால் ஏற்படும் தோஷங்களை விரட்டுபவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

மிருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாயநாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாயஆகாயத்தைக் கூந்தலாக உடையவரே, ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரே, சிவ எனும் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே அனைத்துப் பாபங்களையும் எரிப்பவரே, துர்ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஸிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாயப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஸிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்கள் கொண்டவரே, பெரிய பாம்பினை குண்டலமாகக் கொண்டவரே, வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவானவரே, யமனுக்கு உயிர் அளித்தவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய தன்னலம் கருதாது செய்யப்படும் கர்மாவை ஏற்றுக்கொள்பவரே, ஆசையைப் போக்கடிக்கிறவரே, ஸாம வேதத்தைப் பாடுவோருக்கு  சவுக்கியத்தைக் கொடுப்பவரே, பொன்னிறமான கவசத்தை உடையவரே, பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் புத்தொளியுடன் திகழும் சிவபெருமானே நமஸ்காரம்.

பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
பிறப்பு, இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரே, ஞானத்தையே ஒரே உருவமாயுடையவரே, என் மன விருப்பங்களை நிறைவேற்றுகிறவரே, ஸாதுக்களின் மனத்தில் குடிகொண்டிருப்பவரே, காமனுக்கு எதிரியான சிவபெருமானே நமஸ்காரம்.

ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
யக்ஷர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரே, கருணாமூர்த்தியே, பொன் மயமான வில்லை வலக் கரத்தில் கொண்டவரே, கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இருதய தாபத்தைப் போக்குபவரே, நெற்றிக்கண் கொண்டவரே, மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜாத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
வலது கையில் அக்னியை வைத்திருப்பவரே, அக்ஷரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரே, இந்திரனால் வணங்கப்பட்டவரே, சிவ பஞ்சாக்ஷர தீறக்ஷ பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரே, தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரே, சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
வெள்ளி மலை என்று  பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரே, புன்சிரிப்புடன் திகழ்பவரே, ராஜஹம்ஸம் எனும் பட்சி போல தலைசிறந்து விளங்குபவரே, குபேரனின் தோழன் என்பதை வெளிப்படுத்துகிறவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூல பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரே, புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரே, தன்னுடைய பக்தர்களுக்கு மேரு மலை போல அபயமளிப்பவரே, அரக்கர் கூட்டமாகிய இருளுக்குக் கடுமையான கதிரவன் போன்றவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
ஸர்வமங்களாம்பிகை எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் வாழ்பவரே, அனைத்து தேவ கூட்டங்களுக்கும் மேற்பட்டவரே, அரக்கர் குலத்தை வேரறுப்பவரே, எல்லோருடைய மனத்திலும்
உண்டாகும் வீண் ஆசையை அகற்றுபவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸினே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
குறைந்த அளவே பக்தி செலுத்தினாலும் அந்த பக்தர்களையும் வளர்ப்பவரே, குயில் போன்று குரல் உடையவரே, ஒரு வில்வத்தால் அர்ச்சனை செய்தாலேயே அதனால் மகிழ்பவரே, பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்றுவதில் பெரிதும் அக்கறை செலுத்துபவரே, பார்வதி தேவிக்குப் பிரியமானவரே, பக்தர்களைச் சிறப்பாகக் காத்தருள்பவரே, தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரே, சந்திரனை முடியில் தரித்தவரே, கபாலத்தைக் கையில் ஏந்தியவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமூஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
உமாதேவியின் மனத்துக்கு உகந்தவரே, வெள்ளியங்கிரியில் பொலிபவரே, மஹரிஷிகளின் மனைவிகளையே மோகிக்கச் செய்து பாடம் புகட்டியவரே, தன்னிடம் வேண்டுவோருக்கு வேண்டியன அருள்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

அனுஷம்

மங்களப் ரதாய கோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
மங்களத்தை அருள்பவரே, ரிஷப வாகனத்தை உடையவரே, அலைமோதும் கங்கையை தலையில் தரித்தவரே, எதிர்த்துப் போரிடும் சத்ருக்களை
ஒழிப்பவரே, மன்மதனையும் எரித்தவரே, கையில் மானை உடையவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
பக்தர்கள் விரும்பியதை உடனே வழங்குபவரே, யாகம் செய்பவர்களைக் காத்து அருள்பவரே, ரிஷபக் கொடியுடையோரே, வெள்ளியைத் தோற்கடிக்கும் தேஜஸ் கொண்டவரே, பக்தர் வீட்டில் ஏற்படும் துயரங்களை எல்லாம் அடியோடு வேரறுப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
மூன்று கண்களை உடையவரே, எளியவர்களிடத்தில் கருணை மிகக் கொண்டவரே, தக்ஷ ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரே, சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரே, வணங்கிய பக்தர்களை சிறிதும் தாமதமின்றிக் காப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்க வைப்பதில் தலை சிறந்த படைவீரன் போன்றவரே, சம்சாரக் கடலில் உழன்று தவிப்பவர்களின் பயத்தைப் போக்குபவரே, தாமரை போன்ற கண்களை உடையவரே, சுகத்தை அருள்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரே, சுகத்தைக் கொடுப்பவரே, பவித்ரமான திருநீற்றை கழுத்தில் தரித்தவரே, தன்னுடையது எனும்
எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை ஆட்கொண்டு அருள்பாலிப்பவரே, விஷ்ணுவால் வணங்கப்பட்டவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
சுவர்க்கத்துக்குத் தலைவரானவரே, விஷ்ணுவால் போற்றப்பட்டவரே, ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக் குகையில் சஞ்சரிப்பவரே, தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவராகி, புலன்களை அடக்கியவரே, பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரே, உலகத்தையே வெல்பவரான சிவபெருமானே நமஸ்காரம்.

அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
அளவிடமுடியாத தெய்வீக மகிமை பொருந்தியவரே, தன்னைச் சரணடைந்த நல்லோர்களைக் காப்பதில் நாட்டம் கொண்டவரே, தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரே, (மார்க்கண்டேயக்) குழந்தையிடம் தன் பேரன்பைக் காட்டியவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
பரமேஸ்வரரே, உம்முடைய வேலைக்காரர்கள்போல் விளங்கும் பக்தர்களிடம் கருணை காட்டும் பேரன்புக்குரியவனே, இதயத்தால் துதிக்கும் அளவுக்கு அருள்புரிபவரே, நெருப்பைக் கண்ணாக உடையவரே, தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரே, தன்னுடைய திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற
மகிழ்ச்சியைக் கொடுப்பவரே, சிவபெருமானேநமஸ்காரம்.

பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றை இப்பூவிலகிலேயே அருள்பவரே, தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் முதல்வரே, தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் பேரார்வம் கொண்டவரே, ஸாதுக்களின் மனதாகிய தாமரையில் வசிக்கும் யோகியே, சிவபெருமானே நமஸ்காரம்.

உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய
காலனுக்கே காலனானவரே, பாபத்தைப் போக்குபவரே, மாயையை அடக்கியவரே, எப்போதும் நிலவும் துயரத்தைத் துடைத்து அருள்பவரே, பிறந்த ஜீவனுக்கு நித்ய சவுக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ரேவதி

சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய
சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரே, ஜீவர்களைக் காப்பவரே, பிரம்மாவின்
கபாலத்தை உடையவரே, பக்தர்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரே, நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடியவரே, சிவபெருமானே நமஸ்காரம்.