சுவாமி ஜாலியானந்தா





‘‘ஜாலியானந்தாவுக்கு முன்னால உங்க உண்மையான பேரு என்னன்னு கேட்டா ஏன் டென்ஷன் ஆகறீங்க? தகவல் அறியும் சட்டப்படி கேட்டா, ‘பிளேடு பக்கிரி’ன்னு சொல்லிடப் போறான்!’’

‘‘குருஜி ‘எஃப்’ வார்டுன்னா ஏன் மிரள்றாரா? ஃபேஸ்புக்ல குசும்பு பண்ணினதாலதான், நேர்ல வந்து இந்தக் காட்டு காட்டிட்டுப் போயிருக்காங்க!’’

‘‘என்ன குருவே... உங்களை மாடர்னாக்க கம்ப்யூட்டர் கத்துக் கொடுத்தா, எப்பவும் ‘எஸ்கேப்’ பட்டனையே அழுத்தி, நீங்க பழைய கேடிங்கறதை நிரூபிக்கறீங்களே!’’

‘‘டார்ச்சர் பண்றானுங்களே! பழைய மர்டர் கேஸ் சம்பந்தமா போலீஸ் வந்து விசாரிச்சுட்டுப் போன உடனே, ‘ஸ்வீட் மெமரீஸ்’னு எவனோ மெஸேஜ் அனுப்பறான்...’’

‘‘தப்பா எடுத்துக்காதீங்க... தியானப் பயிற்சிக்குவர்றவங்களை உற்சாகப்படுத்தறதுக்கு நான் ஏற்பாடு செய்த ‘சியர் கேர்ள்ஸ்’தான்!’’