ஆரம்பம் படத்துக்காக அடித்துக்கொள்ளும் ஹீரோக்கள்



‘பாபி ஜாசூஸ்’ படத்தில் சில காட்சிகளில் தாடி வைத்து ஆண் வேடத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். அந்த காட்சிகளில் வித்யா அசத்தியிருப்பதாக பட யூனிட் நெகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை வைத்து படம் இயக்க உள்ளார் ராஜ்குமார் சந்தோஷி. அனில் கபூர் நடிக்கிறார். இரு நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமையுமாம்.

கன்னட சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த ராகினி திவேதி, பிரபுதேவாவின் மனதைக் கவர்ந்தார். இதனால் ‘ஆர் ராஜ்குமார்’ படத்தில் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்தார் பிரபுதேவா. ராகினி யின் மோகினி ஆட்டத்தைப் பார்த்து பாலிவுட் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. ‘ஆரம்பம்’ படத்தைப் பார்த்த ஷாருக்கான், அக்ஷய்குமார் இருவருமே அதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறார்களாம். இருவருக்குமே அஜீத் வேடத்தில் நடிக்கவே விருப்பமாம். யாருக்கு லக் அடிக்கும் என பாலிவுட் கவனித்துக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் அனுராக் பாசுவுடன் சேர்ந்து படம் தயாரிக்கிறார் ரன்பீர் கபூர். இதில் பார்ட்னராக சேருமாறு தனது காதலி கேத்ரினாவையும் அழைத்திருக்கிறார் ரன்பீர். ஆனால், படத் தயாரிப்பில் தனக்கு ஈடுபாடு இல்லை என மறுத்துள்ளார் கேத்.

பட வாய்ப¢புகள் குறைநதுவிட்டதால் இசை ஆல்பம், ஃபேஷன் ஷோ என வேறு விதத்தில் தன்னை நிலை நிறுத்த போராடி வருகிறார் பிரியங்கா சோப்ரா.
ஷாருக்கானின் எதிரி களை தனது நண்பர்களாக ஆக்கிக் கொள்வதில் கில்லாடி, ஆமிர் கான். ஷாருக், இயக்குநர் கரண் ஜோஹர் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை இப்போது அவர் பயன்படுத்தி கரணுக்கு நண்பர் ஆகியுள¢ளார்.

- ஜியா