பிரச்னை செய்தாரா ஹனி ரோஸ்?



 ‘காத்தவராயன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சலங்கை துரை சொந்தமாக ‘காந்தர்வன்’ படத்தை தயாரித்து இயக்குகிறார். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தொடங்கப்பட்ட படம் இப்போதான் முடிஞ்சிருக்கு. அண்மையில் பாண்டுவை சந்தித்த சலங்கை துரை ஹீரோயின் ஹனிரோஸ் பற்றி ரொம்பவே வருத்தப்பட்டார்.

‘‘அழகா இருந்தும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருக்குறாரேன்னு ஹனியை ஹீரோயினா நடிக்க வச்சேன். நானே கஷ்டப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி சொந்தமா இந்தப் படத்தை தயாரிக்கிறேன். ஆனா, ஷூட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணிட்டு ஹனிரோஸை தொடர்பு கொண்டா போனைக்கூட எடுக்கிறதில்லை. எப்ப போன் பண்ணினாலும் ஷூட்டிங்குல இருக்கேன்னே பதில் சொல்வார். இல்லைனா அவரோட அப்பா பேசுவார். ‘மோள் ரொம்ப பிசியாக்கும். குறைச்சு திவசம் கழிச்சு விழிக்கு’னு சொல்லிடுவார்.

என் படத்துல நடிக்க ஆரம்பிச்ச நேரம் ஹனி ரொம்ப பிசியாகிட்டாருங்கறது உண்மைதான். ஆனாலும் என் படத்தை முடிச்சுக் கொடுக்கணுமா இல்லியா? எப்படியோ ஒரு வழியா படத்தை முடிச்சிட்டேங்க. இரண்டு வருஷம் படம் லேட்டுன்னா அதுக்கு ஹனிதான் காரணம். ஆனா, அவரைப் பத்தி எங்கயும் புகார் சொல்லலை. காரணம், அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கார். இந்தப் படத்துக்குப் பிறகு அவரோட இமேஜ் தமிழ் சினிமால மாறும்’’ என்றார்.

பாண்டுவுக்கு தெரிஞ்ச வரையில் ஹனிரோஸ் நல்லவராச்சே... அவரா இப்படி என்ற சந்தேகத்தோடு அவரை தொடர்பு கொண்டோம். ‘‘நான் எப்பவுமே அப்படி நடந்துக்கிட்டதில்ல. தமிழ்ல நல்ல வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய விஷயம். அதை இப்படி தவறா யூஸ் பண்ணுவேனா? அந்தப் படம் லேட்டானதுக்கு என்ன காரணம்னு தெரியாது. அவங்க கூப்பிட்டப்பல்லாம் போய் நடிச்சுக் கொடுத்திருக்கேன். மலையாளம் மற்றும் கன்னடப் படங்கள்ல பிசியா இருக்கேன். அந்த ஷூட்டிங் நடந்திட்டிருக்குறப்போ சில நேரங்கள்ல
கூப்பிட்டாங்க. அதை கேன்சல் பண்ணிட்டு நான் எப்படி போக முடியும்?’’ என்றார்.

- சினிமா பாண்ட் 007