நவீன சரஸ்வதி சபதம்



ஜெய்யும், நிவேதா தாமஸும் காதலர்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெய் தன் நண்பர்களுக்கு தாய்லாந்தில் விருந்து கொடுக்கிறார். அது வில்லங்கமாக அமைகிறது. விருந்துக்கு சென்ற ஜெய் டீம் தாய்லாந்திலிருந்து தாய்நாட்டுக்கு திரும்பினார்களா, இல்லையா என்பதுதான் படம்.

படத்துக்கு படம் தனித்துவம் காண்பிக்கும் ஜெய் இந்தப் படத்திலும் கச்சிதம். பாதி படத்துக்கு மேல் ஹீரோ ஒரு பக்கம் ஹீரோயின் ஒரு பக்கம் என்று இருப்பதால் நிவேதா தாமஸுக்கு வாய்ப்பு குறைவு. மனோபாலா, சித்ரா லட்சுமணன் இருவரும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். பிரேம் இசையில் ‘காத்திருந்தாய் அன்பே...’ பாடல் ஒன்ஸ் மோர். இந்து கடவுள்களை மாடர்னாக காண்பித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒளிப்பதிவு கச்சிதம். ‘முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி ஸ்லோ’ என்று மனோபாலா பேசும் வசனம் இந்தப் படத்துக்கும் பொருந்தும்.