ஏப்ரல் மாத ராசி பலன்கள்




மேஷம்: எடுத்த காரியத்தை முயற்சி செய்து முடிக்கும் திறனுடையவர்களே! வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக இருந்து வந்தது. இனி அது மாறும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

பரிகாரம்: விநாயகர் கோயிலுக்குச் சென்று வலம் வருவது நல்லது. சந்திராஷ்டம தினங்கள்: 18, 19 போன்ற தேதிகளில் வாகனங்களில் செல்லும்போது வேகத்தைக் குறையுங்கள்.    
அதிர்ஷ்ட நாட்கள்: 4, 5.


ரிஷபம்: சொன்ன சொல்லை
எப்பாடுபட்டேனும் காப்பாற்று
பவர்களே! எதைப் பேசினாலும்

அவமானம், எதைச் செய்தாலும் தலைகுனிவு என இருந்தீர்களே? அந்த நிலை மாறும். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்லத் தயாராகுங்கள். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. வெகு காலமாக தாமதமான மழலை பாக்கியம் கிட்டும். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் மாதத்தின் இறுதிகளில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.

பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்கு சென்று தாயாரை வணங்கி வருவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 போன்ற தேதிகளில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.      
அதிர்ஷ்ட நாட்கள்: 6, 7.

மிதுனம்: எதிலும் தர்மத்தை தவறாது கடைப்பிடிப்பவர்களே! பல நன்மைகள் கிடைக்கும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். மாதக் கடைசியில் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். தாயார், தாய்வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள்.

நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பரச் செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வருவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 ஆகிய நாட்களில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். 
அதிர்ஷ்ட நாட்கள்: 8, 9.

கடகம்: உணர்வுகளை சரியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துபவர்களே! வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். எந்தக் காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதரரின் உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நெருப்பு மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் விளையாட்டாக இருக்காதீர்கள்.

கணவன் மனைவி உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது. தந்தையாருடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம். முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உறங்குவதற்கு முன்பு தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் சிவனை வழிபடுவது நல்லது. சந்திராஷ்டம தினங்கள்: 24, 25 ஆகிய தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.    
அதிர்ஷ்ட நாட்கள்: 10, 11.


சிம்மம்: எந்த இடத்திலும் சுயமரியாதையை இழக்காமல் சாதிப்பவர்களே! நன்மையான பல காரியங்கள் நிகழும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் யோகம் கூடி வரும் காலமிது.

மாணவ மணிகள் படிப்பில் சாதனைகள் புரியலாம், ஆனால், சோம்பல் கூடவே கூடாது. எதிர்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை வீட்டிலுள்ளவர்களிடம் ஆலோசித்துச் செய்யவும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல்நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை.  வேலை செய்யும் இடத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும்.

உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்கும் முன்பு எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கு பயணம் செய்தாலும் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும்.
பரிகாரம்: பிரதோஷ காலங்களில் சிவாலயத்திற்குச் சென்று வலம் வருவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28 ஆகிய தேதிகளில் புதிய தொழிலைத் தொடங்க வேண்டாம். 
அதிர்ஷ்ட நாட்கள்: 12, 13, 14.

கன்னி: எப்போதும் உழைப்பைப் பற்றிய சிந்தனையை உடையவர்களே! சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போகலாம். எனவே, கவனத்துடன் வாக்கு கொடுங்கள். மிகுந்த பொருட்செலவில் சுபவிரயங்கள், எடுத்த காரியங்களில் தடை, எதுவுமே நேர்மாறாக இருப்பது என கடந்த காலங்களை மிகுந்த சிரமத்துடன் கழித்தீர்களல்லவா, இனி வருங்காலம் மிகவும் நன்றாக இருக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்கப் பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம்.

 உங்கள் முரட்டுத்தனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும்.
சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான நிறுவனங்களில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் மஹா
விஷ்ணுவை வணங்குவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2 ஆகிய தேதிகளில் இரவுநேரப் பயணத்தில் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.    
அதிர்ஷ்ட நாட்கள்: 15, 16.

துலாம்: அனைவரையும் தங்களது செயல்களால் வசீகரிப்பவர்களே! தற்போதுள்ள சூழ்நிலையில் பொருளாதார சிக்கல்கள் விலகும். முயற்சி செய்த அளவுக்கு வெற்றியும், நினைத்த இடத்திற்கு முன்னேற இருக்கும் தடைகளும் இனி விலகும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள். வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதைச் செய்ய மறவாதீர்கள்.

 உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வு கிடைக்கும் தொழில்செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாரத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.

தூங்கப் போகும்முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹா
லட்சுமிக்கு விளக்கு ஏற்றி வழிபடுதல் நலம்.
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5 போன்ற
தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட
வேண்டாம்.
அதிர்ஷ்ட நாட்கள்: 17, 18, 19.

விருச்சிகம்: உழைப்பால் தன்னையும் தனது குடும்பத்தையும் உயர்த்துபவர்களே! உங்களுடைய அன்றாடப் பணிகள் சரிவர நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தன லாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமுக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப் போகும் காலமிது. செலவுகளைப் பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம் பரச் செலவுகள் வேண்டாம். இளைய சகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தான பாக்கியம் கிட்டும் காலமிது. முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம்.

கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாகச் செய்யுங்கள். தாய், தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.

பரிகாரம்: சிவன் கோயிலில் இருக்கும் முருகன் சந்நதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.     
அதிர்ஷ்ட நாட்கள்: 20, 21.

தனுசு: எல்லா நேரத்திலும் கடவுளை மறக்காது வணங்குபவர்களே! தங்களுடைய அந்தஸ்து உயரும். இளைய சகோதரத்துடன் சின்னச் சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை, வேலை செய்யும் இடத்தில் குழப்பம் என ஒரு குழப்பமான சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். சின்னச் சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விசேஷங்கள் நடக்கப்போகும் காலமிது.

வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய், தந்தை ஆரோக்யத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவச் செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பி காரியத்தை செய்யுங்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்பாள் ஆலயத்திற்குச் சென்று வருவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 ஆகிய தேதிகளில் புதிய தொழில்கள் எதையும் தொடங்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாட்கள்: 22, 23, 24.


கும்பம்: எப்போதும் அடுத்தவர்களுடைய நலனிலேயே அக்கறை கொண்டிருப்பவர்களே! வியாபாரம் செழிப்படையும். எதிலும் ஏமாற்றம், பங்குதாரர் களுடன் மனக்கசப்பு, வேலை செய்யும் இடத்தினில் கூடுதல் வேலைபளு என மிகப்பெரிய சவாலை சமாளித்திருக்கிறீர்கள். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். படிப்பு, வாகனம் ஆகியவற்றில் லாபம் உண்டு.

சின்னச் சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனை களை பார்க்கலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று பிடியுங்கள். அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். தண்ணீரை காய்ச்சிக் குடிக்கப் பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரும். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டியது வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், வேலைப் பளு வரலாம். எங்கும்
பயணிக்கும் முன்னும் முன்னோர்கள் வழிபாடு முக்கியம்.

பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று வருவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14 ஆகிய தேதிகளில் இரவு நேரப் பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நாட்கள்: 1, 28, 29.

மகரம்: அடுத்தவருடைய குறைகளை பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்பவர்களே! இதுவரை பட்ட காலிலேயே படும் என்பது போன்ற நிலை மாறும். நீங்கள் செய்யாத தவறுக்கெல்லாம் மாட்டிக் கொண்டீர்களே, இனி நீங்கள் அதிலிருந்து தப்பிப்பீர்கள். கோர்ட், போலீஸ் என்றிருந்த நிலைமை மாறும். இதுவரை இருந்து வந்த உங்களுக்கு எதிராக இருந்த நிலைமை மாறும். நிதானமாக எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும்.

வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவையில்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். கேட்டால் மட்டும் உதவி செய்யுங்கள். உதவி கேட்காதவர்களுக்காக நீங்களாக யாருக்கும் உதவி செய்தல் கூடாது. எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதைக் குறையுங்கள். மருத்துவச் செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் மிகுந்த கவனம் தேவை. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். அடுத்தவருக்குச் சொல்லும் யோசனையை நீங்களும் கொஞ்சம் பயன்படுத்தி பாருங்களேன். கலைஞர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும்.

பரிகாரம்: ஐயப்பன் கோயிலுக்குச் சென்று
வருவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 ஆகிய நாட்களில் வாகனத்தில் வேகத்தைக் குறையுங்கள்.     
அதிர்ஷ்ட நாட்கள்: 25, 26.


மீனம்: தான் மட்டும் உயராமல் தன்னுடன் சார்ந்தவர்களும் உயர வழிவகை செய்பவர்களே! உங்களுடைய ஒவ்வொரு அடிகளையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய கால
கட்டமிது. தடைபட்டிருந்த திருமணம், கல்வி எல்லாம் நீங்கும். எந்தப் பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்களைப் பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லிச் சொல்லி கொடுப்பது இருக்கட்டும்.

முதலில் நீங்கள் நன்று படியுங்கள். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பார்கள். ஆனாலும், நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கிறீர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போங்கள். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.     அதிர்ஷ்ட நாட்கள்: 2, 3.